×

பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை

திருவெறும்பூர்: திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர் (எ) பன்னி சேகர். முன்னாள் அதிமுக கவுன்சிலராக இவரது மனைவி கயல்விழியும் அதிமுக கவுன்சிலராக இருந்துள்ளார். இவர்களுக்கு முத்துக்குமார், இளவரசன் என 2 மகன்கள் உள்ளனர். சேகரின் சகோதரர் பெரியசாமி. இவருக்கு தங்கமணி, சிலம்பு (எ) சிலம்பரசன், லோகநாதன் என 3 மகன்கள் உள்ளனர். இதில் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் பெரியசாமி இறந்துவிட்டதால் தொழில் அனைத்தையும் சேகர் மற்றும் அவரது 2 மகன்களும் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சேகரிடம், பெரியசாமி மகன்களான தங்கமணி, சிலம்பரசன், லோகநாதன் ஆகியோர் தங்களுக்கு உரிய சொத்தை பிரித்து கொடுக்கும்படி பலமுறை கேட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் தங்கமணி, சிலம்பரசன் ஆகியோர் தங்களது நண்பருடன் சேர்ந்து கடந்த 2011ம் ஆண்டு சேகரை வெட்டி படுகொலை செய்தனர்.

கடந்த 2021ல் முத்துக்குமார் தரப்பினர், தனது தந்தையை வெட்டி படுகொலை செய்த சிலம்பரசனை பழிக்கு பழியாக வீட்டின் பின்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதனால் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக முத்துக்குமார் (28) மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முத்துக்குமார், தனது வீட்டு மின்மோட்டார் பழுதடைந்ததை ரிப்பேர் பார்த்து வாங்கி கொண்டு வீட்டிற்கு பைக்கில் சென்றார்.

அப்போது தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குப்பை கிடங்கு செல்லும் சாலை அருகே வந்தார். அப்போது முத்துக்குமாரை, லோகநாதன் தரப்பினர் வழி மறித்துள்ளனர். இதனால் முத்துக்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்து தப்பி ஓடினார். அவரை லோகநாதன் மற்றும் அவருடன் வந்த கூட்டாளிகள் ஓட ஓட விரட்டி சரமரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.

இதில், தலை, முகத்தில் படுகாயம் அடந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதன், இளஞ்செழியன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

The post பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Tiruverumpur ,Gable Shekhar (A) Bunny Shekhar ,Ariyamangalam, Trichy ,Kayalvizhi ,Muthukumar ,Illasasan ,Sekhar ,Periyaswamy ,
× RELATED திருச்சி திருவெறும்பூர் அருகே...